
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முதல் 60-70 வருடங்களை எடுத்துப் பார்த்தால், திரைப்பாடல்களில் வாயசைத்து நடிப்பவருக்கும், பாடலுக்குக் குரல் கொடுப்பவருக்கும், பாடலை இசையமைப்பவருக்கும், பாடலின் வரிகளை எழுதுபவருக்கும் அதற்கான அங்கீகாரம் திரைப்படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும். பெயர்பட்டியலிலும், பாடல்கள் இசைத்தட்டாகவோ, ஒலிநாடாவாகவோ வெளியாகும் போது அவற்றின் உறைகளில் உள்ள விவரங்களிலும் கிடைத்துவிடும். ஆனால் அந்தப் பாடல்களில் பங்காற்றிய வாத்திய இசைக் கலைஞர்களின் பெயர்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.
கடந்த 20 ஆண்டுகளில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையப் பத்திரிகைகள், சமூக வலைத்தளங்கள் மூலமாகவே பின்னணியில் மட்டுமே இருந்த கலைஞர்களின் மேல் கொஞ்சமாவது வெளிச்சம் விழத் தொடங்கியுள்ளது. இந்த மாறிய சூழலில்கூட திரையிசையில் நாகஸ்வரம் இசைத்த கலைஞர்களின் மேல் கவனம் ஒப்பீட்டளவில் குறைவாகத்தான் விழுந்துள்ளது.
இந்த முன்குறிப்பை எழுதக் காரணம், இந்தக் கட்டுரை ஓர் முழுமையான ஆய்வின் முடிவில் எழுதப்பட்ட ஒன்றல்ல என்பதைச் சுட்டத்தான். தரவுகள் சரியான முறையில் தொகுக்க பல பேரின் சில வருட தொடர் உழைப்பாவது தேவைப்படும் என்பதால் இந்தக் கட்டுரையில் எண்ணற்ற விடுபடல்கள் நிச்சயம் இருக்கும் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். நாகஸ்வர கலைஞர்களின் மேலும், நாகஸ்வர இசையின் மேலும் ஈடுபாடுள்ள ரசிகனின் ரசனைப் பகிர்வுகளாக இந்த முயற்சியைக் கொள்வது உசிதமென்று நினைக்கிறேன்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.