
தன் வாழ்நாளில் எத்தனையோ கலை உச்சங்களைத் தொட்டுப் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும், திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளையைக் குறிக்கும் போது அவருக்குத் தவில் மேதை நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் அளித்த ‘நாகஸ்வர யமன்’ என்கிற பட்டமே பிரபல முன்னொட்டாக அமைந்தது.
எதை வாசித்தாலும் அதில் லய நுணுக்கங்களை நுட்பமாய் புகுத்தி உடன் வாசித்தவரின் கவனம் சிறிது தவறினாலும் இடறும் வகையில் வாசித்த ‘யமகாதகர்’ என்கிற அர்த்தத்தில் மட்டும் வழங்கப்பெற்ற பட்டம் அதுவன்று.
புராணத்தில் யமன் தர்மராஜன். வேண்டுபவர்/வேண்டாதவர், நல்லவர்/தீயவர், முதியவர்/இளையவர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் தமக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாது இருப்பவன். அந்த அர்த்தத்தில் தாளம் போடுபவரின் தாளம் நிர்ணயம் எப்படி, உடன் வாசிப்பவர் சற்று ஓட்டியும் இழுத்தும் காலபிரமாணத்தைக் குலைக்கிறாரா என்றெல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தாத எத்தனை நுணுக்கமான பல்லவியானாலும் கொஞ்சம் கூட தாளத்திலிருந்து வழுவாது வாசித்ததால் அந்தப் பட்டம் என்று பலர் சொல்லிக் கேட்டதுண்டு.
எனக்கு இந்தத் ‘தர்மத்தில்’ இன்னொரு விஷயமும் சேர்த்தி என்று சொல்லத் தோன்றுகிறது. யாரும் கேட்டிராத கணித அடுக்குகளை எல்லாம் புகுத்திய போதும் எடுத்துக் கொண்ட ராகத்தின் இனிமை கொஞ்சம் கூடக் கெடாமல் வாசித்தல் என்கின்ற தர்மத்திலிருந்தும் சற்றும் விலகாத பாணியையும் சேர்த்துத்தான் நீடாமங்கலத்தார் அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கியிருப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.