
உள்ளத்தை அள்ளித்தா’ படம் வெளியானபோது எங்கள் பள்ளியெங்கும் அந்தப்படத்தில் வந்த நகைச்சுவையைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது . குறிப்பாக , “யோவ் மிலிட்டரி . . அந்த துப்பாக்கியை எடுத்து சுடுய்யா . .” என கவுண்டமணி , ஜெய்கணேஷிடம் சொல்லும்போது , அவர் அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு , “துப்பாக்கியா ? அதெல்லாம் சுடத்தெரியாதே . . நான் மிலிட்டரியில சப்பாத்திதானே சுட்டுட்டு இருந்தேன் . .” என்றதும் திரையரங்கே அதிர்ந்ததை நண்பர்கள் விவரிக்கும்போது மனமார சிரித்தது இந்தக்கட்டுரையை எழுதத்தொடங்கிய நொடியில் நினைவுக்கு வந்து செல்கிறது .
கவுண்டமணி நடிப்புத் தொழிலில் உச்சத்தில் இருந்த நேரம் அது . வெறும் காமெடியன் என்கிற இடத்தில் எல்லாம் அவரை அப்போது வைத்துவிட முடியாத அளவு , இரண்டாவது கதாநாயகன் என்கிற விதத்தில்தான் அவர் படம் முழுக்க வந்துபோவார் . கவுண்டமணி புகழ்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் , அவருக்கென படத்தில் தனி காமெடி டிராக் இருக்கும் . அவரும் செந்திலும் அவ்வப்போது படத்தினிடையே வந்து சில நகைச்சுவைகளை தந்துவிட்டு பின் காணாமல் போய்விடுவார்கள் .
அப்படியான காட்சிகள் கொண்ட படங்கள் நிறைய இருந்தாலும் கூட , அதில் பல பிரபலம் அடைந்திருந்தாலும் கூட , ஏன் கரகாட்டக்காரனோ அல்லது உள்ளத்தை அள்ளித்தாவோ இன்னும் சிறப்பான அனுபவத்தை தந்தது என்று யோசித்தால் அதற்கான முக்கிய காரணம் , இந்தப்படங்களில் எல்லாம் கவுண்டமணி தனியாக காமெடி செய்யவில்லை . கரகாட்டம் ஆடும் நாயகனுக்கு உதவியாக அவரது குழுவிலேயே தவில் வாசிப்பவராக இருப்பார் .
நாயகனை உற்சாகமூட்டுவார் . அவரோடு இணைந்து பாடல்கள் பாடுவார் . சில செண்டிமெண்ட் காட்சிகளில் பங்குபெற்று சோகமான வசனங்கள் கூட பேசுவார் . ஆனால் ‘உதயகீதம்’ மாதிரியான படங்களில் இது நிகழவில்லை. மோகன் இருக்கும் அதே சிறையில் கவுண்டமணி இருப்பார் என்பதைத்தவிர வேறு எந்த தொடர்பும் அங்கே இல்லை.
இதில் இருந்து காமெடி ட்ராக் வித்தியாசப்பட்ட படங்களான, ‘உள்ளத்தை அள்ளித்தா’ , ‘மேட்டுக்குடி’ , ‘முறைமாமன்’ , ‘உனக்காக எல்லாம் உனக்காக’ ஆகிய படங்களை நாம் அணுகவேண்டும் . என்ன எல்லாமே சுந்தர் . சி படமாக இருக்கிறதா ? கட்டுரையே அதுதான் .
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.