எல்லோர்க்கும் உதவி செய்பவனாக, அநியாயத்தை தட்டிக் கேட்பவனாக என்று ஒரு திரைப்படத்தின் கதாநாயகனை நல்லவனாக மட்டுமே காண்பித்து திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முதல்முறையாக ஹீரோவை எதிர்மறை நாயகனாக காண்பித்தது ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த “அந்த நாள்” திரைப்படம். பாடல்கள், நடனம், சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஒரு திரைப்படத்தை சோதனை முயற்சியாக தயாரிக்கும் துணிவு அப்போதே ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தது.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அதை மையமாக கொண்டு வீணை பாலச்சந்தர் என்று அறியப்பட்ட S. பாலச்சந்தர் ஒரு நாடகம் வானொலிக்காக எழுதுகிறார். ஆனால் அகில இந்திய வானொலியால் நிராகரிக்கப்பட்ட அந்த நாடகத்தை ஏவிஎம் திரைப்படமாக்க முடிவு செய்து அவரையே இயக்குநராக நியமிக்க, அந்த நாள் திரைப்படம் வெளிவருகிறது. இதன் கிளைமேக்சை யாரிடமும் சொல்லாதீர்கள் என்கிற அறிவிப்போடு படத்தை வெளியிட்டனர். கொலைகாரனை கண்டுபிடிக்கும் கிரைம் திரில்லர் படங்களுக்கு முன்னோடியாக இந்த படம் இருந்தது.
எஸ்.பாலசந்தரின் படங்கள் அப்போதே ஒரு ஆங்கில நாவலைப் படித்தது போன்று இருக்கும். அவருடைய ‘மேக்கிங்’கும் கூட அப்படியானது தான். ஒரு ஷாட் இப்படித் தான் இருக்க வேண்டும் என்கிற தீர்மானம் எஸ்.பாலசந்தரிடம் இருந்தது. அதற்கு சரியானதொரு சாட்சி ‘அந்த நாள்’ படம். அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் மாருதி ராவ்.
இந்தப் படத்தின் டைட்டிலில் தொடங்கிவிடும் மாருதி ராவின் மேதமை. நாற்பதுகளில் வெளிவந்த படங்களில் காணக் கிடைக்காத, இப்போதும் ஆச்சரியம் ஏற்படுத்தும் காட்சிகள் அவை.
சிவாஜி கணேசனும், அவருடன் உறவில் இருக்கும் காதலியும் பூங்காவில் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியில், ஒளியமைப்பு அபாரமாக இருக்கும். சிவாஜி மிகவும் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைப்பார். அவர்கள் இருவரையும் நிழலுருவங்களாக (silhouetee) காண்பித்திருப்பார். குளோசப் காட்சியில் மட்டும் அவர்கள் முகத்தில் வெளிச்சமிருக்கும்.
சிவாஜி பண்டரிபாயைக் கட்டிப்போட்டு பேசும் காட்சியில் ஒரு சுழலும் நாற்காலியில் அமர்ந்து சுழன்று கொண்டே பேசும் போது கேமரா எதிர்ப்புறம் அதற்கேற்ப சிவாஜி கணேசனின் point of viewவில் pan ஆகும். கட்டிப் போட்டுக் கொண்டே பேசும் போது நாற்காலியின் இடைவெளி வழியே தெரியும் சிவாஜியின் முகத்தின் வழியே அந்த கேரக்டரின் எதிர்மறைத்தன்மையை காண்பித்திருப்பார். அதே காட்சியில் அவர் ஜன்னலருகில் நின்று பேசும் போது ஜன்னல் கம்பிகளும் இருட்டுமாக சிவாஜியின் முகத்தில் குரூரம் தெரியும் விதமாக முழுமையான அவர் கேரக்டரை காண்பித்திருப்பார். சுழலும் நாற்காலியைச் சுற்றி விட, அது சுழன்றுகொண்டிருக்கும் கோணத்தின் வழி அவர்கள் இருவரையும் காண்பித்திருப்பார்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.