ரமேஷ் வைத்யா
ப்ரியா படம் பார்த்துவிட்டு வந்திருந்தேன். மொத்தப் படத்திலும் எனக்குக் கிடைத்தது வேறு யாருக்குக் கிடைத்ததோ அறியேன். ஸ்ரீதேவியின் இளமைகூட என் மனதுக்குப் படவில்லை. படம் பார்த்ததற்கு அடுத்த நாள் நான் ரோமப் பேரரசனாக இருந்தேன். மேற்படிப் படத்தில் ரஜினி இன்ட்ரோ காட்சியாக ஜூலியஸ் சீஸர் நாடகம் வரும். ஒரு நடை போட்டு ரஜினி என்ட்ரி கொடுப்பார்.
ராஜபார்ட்டாக சிவாஜியின் நடையைப் பார்த்த அதே கண்கள் இந்த நடையையும் பார்த்தன. வந்து திரை மையத்தில் நின்றதும், “எல்லாரும் பந்தாயித்தா?” என்று சீஸர் கேட்டார். அடச்சீ என் காதில்தான் அப்படி விழுந்திருக்கிறது. அவர் கேட்டதென்னவோ, “எல்லோரும் வந்தாயிற்றா?” என்றுதான். சீஸர் நாடகக் கதையை விடுங்கள், அந்தக் காட்சி என் மனதில் பதிந்துவிட்டது போலும்.
மறுநாளே நான் ரோமப் பேரரசனாக மாற ஆசைப்பட்டுவிட்டேன். அப்படி ஆவது ரொம்ப ஈஸியாக இருந்தது. முடி வெட்டும்போது சலூனின் துண்டு போர்த்துவார்கள் அல்லவா (மென் மெட்டீரியல்) அந்த மாதிரி இல்லாமல், துண்டை குறுக்கு வாக்கில் முந்தானை போல் போர்த்திக்கொண்டால் தீர்ந்தது, நான் ரோம அரசன். சீஸர். என் மெல்லிய தேகத்தில் முடிந்த அளவு கம்பீரத்தைக் கொண்டுவந்து, “எல்லாரும் பந்தாச்சா? அந்தக் கலா எங்கே காணோம்?” என்று சமையலறையைச் சமையலவையாக்கி உலவினேன்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











