
Adolescence மார்ச் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. வெளிவந்த உடனேயே பேசுபொருளாகியிருக்கிறது.
நாடு, இன, மத பேதமின்றி உலகமே குழந்தை வளர்ப்பை பயத்துடன் எதிர்கொண்டிருப்பதை இந்த சீரிஸ் உணர்த்திவிட்டது எனலாம். இணையம், செல்ஃபோன், சோசியல் மீடியா போன்ற வெளிப்படையான கூறுகள் மட்டுமே ஒரு குற்றத்தில் பெரும் பங்காற்றுவதில்லை. ஒரு குற்றத்தின் வேர் எங்கிருந்தெல்லாம் தொடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவாக சொல்லும் கதை.
பள்ளியில் படிக்கும் பதின்ம வயது பெண் கொலை செய்யப்படுகிறாள். அவளைக் கொலை செய்தது அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் ஜேமி என்பது போலீசுக்குத் தெரிகிறது. ஜேமியை விசாரணைக்கு போலிஸ் அழைத்து வருகிறது. விசாரணைகளும் ஜேமியின் மனநிலையும், மேற்கத்தியக் குழந்தைகளின் சூழலும், அவர்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்தும் இந்தத் தொடர் சொல்கிறது. மொத்தம் நான்கு எபிசோடுகள். ஒரு ஆவணம் போல சொல்லியிருப்பதால் இந்தத் தொடர் மிகுந்த வரவேற்பையும், அச்சத்தையும், எச்சரிக்கையினையும் தந்திருக்கிறது.
கதையாகப் பார்த்தால் முதல் பகுதியிலேயே என்ன நடந்திருக்கிறது என்பது தெரிந்துவிடுகிறது. ஏன் நடந்தது என ஆராய்ந்து புரியவைக்கும் நோக்கத்திலேயே கதை நகர்கிறது. இது தான் இந்தத் தொடரை பேச வைத்திருக்கிறது. கொலையை நேரடியாகக் காட்டிக் கொண்டே இருக்காமல் சிசிடிவி மூலமே அந்த குரூர சம்பவத்தை நம்மைப் பார்க்க வைக்கிறார்கள். கொலை நடந்தது உறுதியானவுடன், ஏன் நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள போலிஸ் பள்ளிக்கூடத்தில் விசாரணையில் இறங்குகிறது. பள்ளியில் நிகழும் சம்பவங்களில் இருந்து நமக்கு ஒரு பார்வை கிடைக்கும். நான்காவது எபிசோட் மூன்றாவது எபிசோடுக்கு எந்த நேரடித் தொடர்புமின்றி விளக்கமாகவும் விளைவாகவும் எழுதப்பட்டிருக்கும். நடக்கும் சம்பவங்களின் மூலமும், பேசும் வசனங்கள் மூலமும் நடந்ததென்ன என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கும். அது அவரவர் அளவுகோலின்படி பூடகமாக புரிந்துக் கொள்ள வேண்டிய காட்சியனுபவத்தை சிறப்பித்திருக்கிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.