தமயந்தி
‘காயல்’ திரைப்படம் நான் இயக்க ஆரம்பித்ததே மிகவும் எதிர்பார்க்காத ஒன்று. இந்தக் கதையை நான் வேறொரு இயக்குநர் இயக்குவதற்காக எழுதினேன். ஒரு மிகப் பிரம்மாண்டமான ஒரு கதையை நாங்கள் எழுதியபோது, அதற்கான பட்ஜெட் எந்தத் தயாரிப்பாளரும் தர முன்வராத ஒரு சமயத்தில், என்னுடைய வாழ்வை மையப்படுத்தி எழுதலாம் என்று நினைத்து நாங்கள் முடிவு செய்ததுதான் காயலின் திரைக்கதை.
முதன் முதலில் நாங்கள் வைத்த பெயர் ‘வேறென்ன மொழி வேண்டும்’ என்பதே. ஒரே வாரத்தில் திருவண்ணாமலைக்குச் சென்று, அங்கு இருந்த எஸ்.கே.கருணா அவர்களின் கெஸ்ட் ஹவுஸில் தங்கி, ஒரு வாரத்தில் எழுதி முடித்த முதல் படிவம் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து ஒரு சிறு நடைப்பயிற்சி, அப்போதே அன்று எழுதக்கூடிய காட்சிகளைப் பற்றிய விவாதம் மற்றும் உரையாடல், அது முடிந்து அறைக்கு வந்து சூடான ஒரு தேநீரை குடித்துவிட்டு எழுத ஆரம்பித்தால், பத்து மணிக்குக் காலை உணவு உண்ணும் வரை அந்த எழுத்து தொடரும்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











