புதிய பறவை படத்தின் டைட்டில் காட்சிகள் நினைவிருக்கிறதா? ஒரு பெண் இரவு நேரத்தில் ஓடிக்கொண்டே இருப்பார். அவரை ஒரு கார் துரத்தும். அந்தப் பெண் சாலையில், தண்ணீரில், தோப்பில், கடைசியில் தண்டவாளத்தில் ஓடுவார். காரின் ஹெட்லைட் மிரட்டுகிற இரு கண்களைப் போல அவரை ஓடவைக்கும். இந்தக் காட்சியில் பார்வையாளர்கள் முடிவு செய்திருப்பார்கள், நாம் அசாதாரணமான படத்தைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று. அதுவரை இருந்த தமிழ்த் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படம் இது.
ஒரு திரைப்படம் எதைக் களமாகக் கொண்டுள்ளதோ அதில் நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். அழுக்கான இடமென்றால் அதைக் காட்சிப்படுத்துகிற விதத்தில் நம்மையறியாமல் நாம் அழுக்கின் வாடையை திரையரங்கில் உணர்வோம். காட்சிக்கு அந்த சக்தி உண்டு. ‘புதிய பறவை’ படத்தின் நினைவை மீட்டும்போதெல்லாம் ஒரு ‘ஸ்டைல்’ நமது மனதில் படிந்திருப்பதை உணரலாம்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.