
மனிதர்கள் திரைப்படம் கதை உருவாக்கத்திலிருந்து திரைக்கு வருவது வரை நான்கு வருடங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டது. கொரோனாவின் ஆரம்ப காலகட்டம்தான் ‘மனிதர்கள்’ திரைப்படத்திற்கான ஆரம்பம். சரியாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருடம் சொந்த ஊரான திண்டுக்கல்லில் இருக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு உருவானது.
பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் (ஓவியக்கல்லூரி) சேர்ந்து பயில ஆரம்பித்தேன். கல்லூரிக்கு வந்த பிறகு அயல் மொழித் திரைப்படங்கள் எனக்கு அறிமுகமானது. The Way Home, Children Of Heaven போன்ற திரைப்படங்கள் வழியாக ஆரம்பித்து City Of God, Requiem For Dream போன்ற படங்களின் மூலம் மாற்று சினிமா உணர்வு மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இயக்குநராக ஆக வேண்டும் என்ற எண்ணமும் தீவிரமெடுத்தது. கல்லூரியை முடித்து பல ஆண்டுகள் நடைமுறை உலகம் எதிர்பார்க்கும்படியான குறிப்பிட்ட எதுவும் செய்யவில்லை. முழு நீளத் திரைப்படத்தில் பணியாற்றும் வாய்ப்பும் அமையவில்லை. நண்பர்கள் சேர்ந்து குறும்படங்களை எடுத்தோம். குறும்படங்கள் பெருவாரியான மக்களை சென்றடையவில்லை என்றாலும் அது மிக முக்கியமான பயிற்சியாக எனக்கு அமைந்தது. திரைப்படமெடுக்கும் தன்னம்பிக்கையையும் உருவாக்கியது. (குறும்படங்கள் : சிக்கன் ரைஸ்-2017, லைன்-2018, இறகு-2020)
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.