
தலைப்பில் உள்ளது போல் நாராயணீ என்ற அம்மாவின் மூன்று மகன்கள் (விஸ்வநாதன், சேது, பாஸ்கர்) பற்றிய கதை. மரணப் படுக்கையில் இருக்கும் அம்மாவைத் தம் பூர்வீக வீட்டில் குடும்பத்துடன் காண வரும் சகோதரர்கள், அவர்கள் உறவுகளில் உள்ள விரிசல்கள், மனங்களில் உள்ள விகாரங்கள் போன்றவற்றைச் சிறப்பாகப் படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஷரண் வேணுகோபால். வழக்கமான 3-Act structure-ல் இல்லாமல் மிக யதார்த்தமான நிகழ்வுகளின் தொகுப்பாக ஒரு Slice of Life Drama-வாகக் காட்டியிருப்பதால் மிக நிதானமாகவே நகர்கிறது. ஆனால் ஆழமும் அடுக்குகளும் கொண்ட காட்சிகளால் அசர வைக்கிறது.
மூன்றாவது மகன் பாஸ்கரின் வருகையில் படம் தொடங்குகிறது. முஸ்லிம் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்ததால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு உள்ளாகி வீட்டை விட்டு வெளியேறி லண்டனில் செட்டில் ஆகியிருக்கிறான். 24 வருடங்கள் கழித்து தன் இரண்டாவது அண்ணன் சேது அழைத்து அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வரச் சொன்னதால் மனைவி நஃபீஸா, 20 வயது மகன் நிகில், 2 வயது பெண் குழந்தை தனுஜாவுடன் வருகிறான். வெண்டிலேட்டரில் எவ்வித அசைவுமின்றி ஊசலாடிக் கொண்டிருக்கும் அம்மாவின் உயிர் நிம்மதியாக தன் சொந்த வீட்டில் பிரியட்டும் என்று கொயிலாண்டியில் உள்ள தம் பூர்வீக வீட்டிற்கு (தரவாடு) அழைத்துச் செல்கிறார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் மூத்தவன் விஸ்வநாதனுக்கு பாஸ்கரன் வந்ததில் அத்தனை உவப்பில்லை. அவன் மகனை இந்துவாக வளர்க்கிறானா அல்லது முஸ்லிமாக வளர்க்கிறானா என்பதில்தான் ஆர்வம். விஸ்வநாதன், மனைவி ஜெயஸ்ரீ, MA படிக்கும் மகள் ஆதிரா மூவரும் விடுப்பு எடுத்து வந்திருக்கிறார்கள். ஜெயஸ்ரீயும் நஃபீசாவும் முதன் முறை சந்தித்தாலும் சகஜமாக உரையாடுகிறார்கள். ஆதிராவுக்கும் நிகிலுக்கும் இடையே நட்பு மலர்கிறது. பாஸ்கரும் விஸ்வநாதனும்தான் ஒருவித இறுக்கத்துடனே இருக்கிறார்கள். இறுக்கமான சூழ்நிலையை இலகுவாக்க பாஸ்கர் கொண்டு வந்த அயல்நாட்டு மதுபானம் உதவுகிறது. ஜெயஸ்ரீயும் நஃபீசாவும் அவர்களுடன் இணைந்து சகஜமாக மது அருந்தும் காட்சி ஆச்சர்யப்படுத்துகிறது!
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.