கறுப்பு வெள்ளையில் அற்புதங்களை நிகழ்த்திய மூர்த்தி அடுத்து நுழைந்தது வண்ணங்களின் உலகில். கறுப்பு வெள்ளையில் ஒரு படம் கிளர்த்தும் உணர்வுகள் வேறு. வண்ணத் திரைப்படங்கள் உருவாக்கும் உணர்வுகள் வேறு. ஆனால் மூர்த்தியின் மேதமைக்கும் , தொழில் திறனுக்க்கும் வண்ணத்திரைப்படங்கள் ஒரு சவாலாகவே இல்லை.
பிரமோத் சக்ரவர்த்தி இயக்கிய படங்களின் வழியாகத்தான் வண்ணத் திரைப்படங்களின் சகாப்தத்துக்குள் மூர்த்தி நுழைந்தார். ப்ரமோத் சக்ரவர்த்தி இயக்கிய திரைப்படங்களில் பெருவெற்றி கண்ட படம் ஜூக்னு. தர்மேந்திரா, ஹேமமாலினி ஜோடியாக நடிக்க, பெரும் பொருட்செலவில் ஹெலிகாப்டரில் பாடும் பாடல் எல்லாம் வைத்து அன்றைய காலத்தில் மிக நவீனமான திரைப்படமாக இருந்தது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











