குண்டக்கல் ஸ்டேஷனில் மெட்ராஸ் மெயில் வந்து நிற்கிறது. அதில் பயணம் செய்துகொண்டிருந்த அப்போதைய யூனியன் உள்துறை அமைச்சரான ராஜாஜியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பெருந்திரளாக மக்கள் கூடியிருந்தனர். அவரும் முகமலர்ச்சியோடு அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மற்றொரு பிளாட்ஃபாரத்தில் ரயில் வந்து நிற்க, ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் ராஜாஜியிடமிருந்து அதை நோக்கி சென்று விட, அதிர்ச்சியடைகிறார் ராஜாஜி. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரயில்நிலைய கார்டை அழைத்து விசாரிக்க, ‘பாதாள பைரவி’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டவிழா பெல்லாரியில் நடக்க இருப்பதாகவும், அதற்காக அதில் நடித்த நடிகர், நடிகை உள்ளிட்ட படக்குழு அதில் பயணிப்பதாகவும், அவர்களைப் பார்க்க எல்லாரும் செல்கிறார்கள் என்றும் சொல்கிறார். அந்த ரயில் கிளம்ப இருப்பதால், தன்னையும் அவர்களைப் பார்க்க அனுமதிக்குமாறும் வேண்டி விரைந்து செல்கிறார் அந்த ரயில் கார்டு. ஒரு திரைப்படத்தின் தாக்கம் மக்களிடம் எப்படியிருக்கிறது என்று வியந்து நின்றார் ராஜாஜி.
அப்படி உள்துறை அமைச்சரையே யோசிக்க வைத்து மக்களை ஈர்த்த “பாதாள பைரவி” திரைப்படத்தை இயக்கியவர் கே.வி. ரெட்டி, தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக, கூட்டம் கூட்டமாக, வெளியூர்களிலிருந்தெல்லாம் ரயிலில் வந்து ‘பாதாள பைரவி’ படத்தைப் பார்த்தார்கள். 200 நாட்கள் திரையரங்கில் ஓடி அந்தக்கால மதிப்பில் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்த இத்திரைப்படம் தெலுங்கு சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட் காட்சிகளுக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.