‘உத்தமபுத்திரன்’ தமிழ் சினிமாவின் போக்கினை மாற்றிய ஒரு படம். ‘யாரடி நீ மோகினி’ என்று ஜி. இராமநாதன் இசையில் உற்சாகமான குரல்கள் பாட வெளிவந்த இந்தப் பாடல் அந்தக் காலத்து புதுமையான ஃப்யூஷன். ஸ்ரீதர் என்கிற பின்னாட்களில் தமிழ் சினிமாவை அசத்தப்போகிற ஒருவர் எழுதிய திரைக்கதை. தெலுங்கில் வெற்றிப்படங்களைக் கொடுத்து கவனம் பெற்ற T. பிரகாஷ் ராவ் தமிழில் இயக்குகிற படம். இப்படி ஒரு வித்தியாசமான ‘டீம்’ உருவாகியிருந்தது. இவர்கள் எல்லாரும் திட்டமிட்டு கொடுத்த வெற்றி தான் உத்தமபுத்திரன். மற்ற ராஜா காலத்து கதைகள் போல இல்லாமல் புதுமைகள் சிலவற்றைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம். அதற்கு முன்பு கதாநாயகர்கள் இரண்டு வேடமிட்டு நடித்திருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தனித்தனியே வருவார்கள் போவார்கள். படத்தில் இரண்டு சிவாஜி கணேசன்கள். ஒரு சிவாஜியையும், இன்னொரு சிவாஜியையும் தனித் தனியாகக் காட்டுவதில் என்ன இருக்கப்போகிறது? இருவரையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வந்தால் தானே பார்வையாளர்கள் ‘அட!’ என்று பார்ப்பார்கள். அங்கு தான் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மாஸ்டர் தன்னை நிரூபித்தார்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.