இயக்குநர் குருதத் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய விருப்பத்துக்காக ஒரு திரைப்படத்தை தயாரிக்க விரும்பினார். அக்காலத்திலேயே திரைத்துறை மீதிருந்த கவர்ச்சியையும், துரோகம், ஏமாற்றங்கள் நிறைந்த திரைத்துறையின் மறு பக்கத்தையும் அப்பட்டமாக காண்பித்த அத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியை ,மிகவும் தனித்துவமாக எடுக்க விரும்பினார்.
இன்று நாம் மைண்ட் வாய்ஸ் என்று சொல்கிறோமே, அப்படி ஒன்றை வெறும் மனக்குரலாக மட்டுமல்லாமல், மனதிலிருக்கும் விருப்பத்தைச் சொல்ல முடியாமல் தவிக்கும் இருவரின் உடல்கள் அந்த அறையின் ஓரு மூலையில் தனித்திருக்க, அவர்களின் ஆன்மாக்கள் மட்டும் அவர்களிடையே இருக்கும் ஆத்மார்த்தமான பிணைப்பைச் சொல்லாமல் சொல்வது போல் நெருங்கி வரவேண்டும், அந்த அவர்களின் தூய்மையான மனதை வானத்திலிருந்து தெய்வீக ஒளி ஆசி வழங்குவது போல் ஒரு ஒளியமைப்பு வேண்டுமென்று குருதத் தன் ஒளிப்பதிவு இயக்குநரிடம் கூறுகிறார். அவரும் அதை இயற்கையான சூரியஒளியைக் கொண்டே மிக அற்புதமாக செய்ய, அந்த ஷாட் ஓகே ஆகிறது.
அதன் பின்பு, எவர் சூரியக்கதிர் முன்பு நடிகர்களை வைத்து படம் பிடித்தாலும், ‘Murthy’s beam” என்றே அவர் பெயரில் தனித்துவமாக அழைக்கப்பட்டது. அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் ஒளிப்பதிவு இயக்குநர் வி.கே. மூர்த்தி.
1959ல் வெளியான காகஸ் கே பூல் என்கிற ஹிந்தி திரைப்படத்தில் எடுக்கப்பட்ட வக்த் நே கியா என்கிற அந்தப் பாடல் காட்சி பெரிய மைல்கல்லாக இன்றும் உலகளவில் போற்றப்படுகிறது. மதர் இந்தியா போன்ற வெற்றிப்படங்களின் மூலம் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் பரீதூன் இரானி மற்றொரு படப்பிடிப்புக்காக அங்கிருந்தவர் மூர்த்தியின் இந்த ஷாட்டைப் பார்த்து வியப்படைந்தார். மறுநாளே ரஷ் வந்ததும் பார்த்தவர், மூர்த்தியைக் கட்டித் தழுவி, “You have done a great job Murthy, வெளிநாடுகளில் கூட இப்படி யாரும் செய்ததில்லை” என்று பாராட்டினார்.
https://www.youtube.com/watch?v=3TxjJCEKYvE
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











