
‘ஸ்டோரி போர்ட்’ தற்போது இந்திய சினிமாத் துறையில் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை. ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் பிரிக்கவே முடியாத தொடர்பு உண்டு. ஓவியக்கலைதான் பல்வேறு பரிணாமங்கள் பெற்று காட்சிவழியாக கதை சொல்லும் சினிமாவாக மாறியிருக்கிறது.
20ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்த பல சினிமா கலைஞர்கள் தமது திரைமொழியால் எல்லோரையும் கவர்ந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், ஸ்டான்லி குப்ரிக், அகிரா குரோசவா போன்ற மேதைகள் தங்கள் திரைமொழியை வெளிப்படுத்த கையாண்ட மிக முக்கியமான தொழில்நுட்பம் ஸ்டோரி போர்ட்.
ஹிட்ச்காக் திரைக்கதை எழுதும்போதே சில காட்சிகள் எப்படி வரவேண்டும் என்று வரைந்து வைத்துக்கொள்வார். குரோசவா திரைத்துறைக்கு வரும் முன்னரே ஓவியர் என்பதால் முக்கியமான காட்சிகள் வரைந்து வைப்பது என்பது அவர் இயல்பு.
ஸ்டான்லி குப்ரிக் ஒரு இடத்தின் புகைப்படத்தை எடுத்துக் கொள்வார். அந்தப் புகைப்படத்தின் மீது தனக்குத் தேவையான ஷாட்டினை கம்போஸ் செய்து வரைந்து கொள்வார். மார்ட்டின் ஸ்கார்சிசி சிறு வயது முதலே ஓவியம் வழியே கதை சொல்லும் வித்தையில் தேர்ந்தவர். “எனது முழுபடத்தையும் ஸ்டோரிபோர்டு வழியாக முன்னரே பார்த்துவிடுவேன்” என்கிறார் மார்டின் ஸ்கார்சிசி. இவ்வாறான முறைகளில் இயக்குநர்கள் தத்தம் திரைமொழியை உடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், நடிகர், கலை இயக்குநர் என அனைவரிடமும் ஸ்டோரிபோர்டு மூலம் ஒரு தெளிவான பார்வையை கடத்த முடிந்தது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.