
‘ஸ்டோரி போர்ட்’ தற்போது இந்திய சினிமாத் துறையில் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தை. ஓவியத்துக்கும் சினிமாவுக்கும் பிரிக்கவே முடியாத தொடர்பு உண்டு. ஓவியக்கலைதான் பல்வேறு பரிணாமங்கள் பெற்று காட்சிவழியாக கதை சொல்லும் சினிமாவாக மாறியிருக்கிறது.
20ஆம் நூற்றாண்டில் முத்திரை பதித்த பல சினிமா கலைஞர்கள் தமது திரைமொழியால் எல்லோரையும் கவர்ந்தார்கள். ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக், ஸ்டான்லி குப்ரிக், அகிரா குரோசவா போன்ற மேதைகள் தங்கள் திரைமொழியை வெளிப்படுத்த கையாண்ட மிக முக்கியமான தொழில்நுட்பம் ஸ்டோரி போர்ட்.
ஹிட்ச்காக் திரைக்கதை எழுதும்போதே சில காட்சிகள் எப்படி வரவேண்டும் என்று வரைந்து வைத்துக்கொள்வார். குரோசவா திரைத்துறைக்கு வரும் முன்னரே ஓவியர் என்பதால் முக்கியமான காட்சிகள் வரைந்து வைப்பது என்பது அவர் இயல்பு.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.