மனித நாகரிகத்தின் மிக முக்கியக் கண்டுபிடிப்பாக நெருப்பைக் குறிப்பிடுவார்கள். பிறகு சக்கரம், ஆடை என மனிதன் தனக்கான தேவைகளுக்காக எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே தான் இருந்தான். நமது டிசைன் அப்படி. சும்மா இருக்க மாட்டோம். இப்படியாக கடந்த நூற்றாண்டின் ஓர் அற்புத வரவு, இணையம். கடிதங்களிலும், தொலைபேசிகளிலும் நேசித்திருந்த இதயங்களை ‘வாங்கடா கணினிக்கு’ என இழுத்து வந்தது. மனிதத் தொடர்புகளை இன்னும் இலகுவாக்கியது. மை கொண்டு எழுதியிருந்தவர்களை, மை டியர் என திரையில் டைப் செய்ய வைத்தது, முத்தங்கள் ஸ்மைலிகளானது. மொபைல் டேட்டா உயிர் சுவாசமானது. இன்று பூவுலகில் உயிர் வாழ்ந்திருக்கும் ஜீவராசிகளை விட மொபைலில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாம். சரி அப்படி அதிகம் செல்பிகள் க்ளிக்குவது ஆண்களா பெண்களா என எழுதலாம் தான் !! அப்புறம் டிவிட்டரில் அடிப்பார்கள் வேண்டாம்.
சரி ! இத்தனை ஆற்றல் வாய்ந்த, அன்பிற்கினிய இணையம் நன்மைகளை மட்டும் தருகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சமூக வலைதளங்களின் வருகை வரை எல்லாம் நலமாகத் தான் இருந்தது. அதன் பிறகு நிகழ்ந்தது ஒரு தொழில்நுட்பப் பிரளயம். எல்லோரும் எல்லாரையும் திட்டினார்கள், இணையத்தில் எதைப் பதிந்தாலும் வேலிடேஷன் எதிர்பார்த்தார்கள். ட்ரம்ப் பதவி ஏற்பிற்கு வாழ்த்துகள் பதிவிட்ட சுந்தரம் மாமாவின் கமெண்டுக்கு ட்ரம்ப் பதில் அளிக்கவில்லையாம். ரெண்டு நாளாக கோபித்துக் கொண்டு ட்விட்டர் திறக்கவே இல்லை. ஆனால் இன்ஸ்டாவில் ரீல் மட்டும் பார்த்திருந்தார். சுந்தரம் மாமாவின் இந்த வலி நிறைந்த முடிவிற்கு ட்ரம்ப் மட்டும் காரணமில்லை. “ மாப்ள ! புது வேலை, ட்ரம்ப் ரிப்ளை போடலை. சரி! ஆனா இந்த மெலேனா புள்ளக்கு என்ன, அதுவும் அந்த தொப்பி குறித்து கூட ஒரு கமெண்ட் போட்டிருந்தேன்! அதுக்கும் ரிப்ளை பண்ணல”, எனக் கோபித்துக் கொண்டார். வாழ்வு தான் எவ்வளவு கொடுமையானது.” மாமா ! நீங்க கமலா ஹாரிசிற்கு போட்டிருக்கலாம் ! சும்மா இருப்பதால் நிச்சயம் ரிப்ளை பண்ணுவார்” என்றேன்.
ஆக இணையத்தில் எதைச் செய்தாலும் அது முதலில் பார்க்கப்பட வேண்டும், பிறகு பாராட்டப் படவேண்டும், அதோடு நில்லாமல் லைக் ஷேர் கமெண்டுகளின் மூலம் அது அங்கீகரிக்கப்பட வேண்டும். இதை செய்யவில்லை என்றால் எவ்வளவு உற்ற நண்பனாக இருந்தாலும் அவன் அன்றே நமக்கு எதிரி தான் ! வாட்சப்பில் துரோக ஸ்டேட்டஸ் வைத்து விட்டு பிளாக் செய்து விட வேண்டும். இப்படியான ஒரு டிஜிட்டல் மாயையில் சிக்கியிருப்பதன் உச்சம் எது என்பது தான் Black Mirror தொடர்,
எதிர்காலத் தொழில்நுட்பம் அதனால் ஏற்படும் சமூக மாற்றங்கள், உளவியல் தாக்கங்கள், டிஜிட்டல் சம்பிரதாயங்கள் என இத்தொடர் ஒரு பேரனுபவம்! ஆறு பகுதிகள், 26 அத்தியாயங்கள் என இருக்கும் இத்தொடரின் ஒரு சிறப்பு! ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு தனிக்கதை! ஆக நீங்கள் எந்த அத்தியாயத்தில் இருந்தும் பார்க்கத் துவங்கலாம்!
26 அத்தியாயங்களும் அற்புதம் எனினும், என்னை அதிர வைத்த சில அத்தியாயங்கள் இவை.
Nosedive – (மூன்றாம் பாகத்தின் முதல் அத்தியாயம் )
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.