
“சினிமா என்பது நீங்கள் திரையரங்கில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதையே மறக்கடிப்பதாக இருக்க வேண்டும்”
‘Quotes on cinema’ என்று கூகுளில் போட்டுத் தேடியவுடன் வந்தது இது. ஒரு கம்பீரமான தொடக்கமாக இருக்கட்டும். மற்றபடி தமிழ் சினிமா பார்த்த என் அனுபவங்கள் வேறு. அவை பல்சுவை.
நல்வாய்ப்பாக, நான் பார்த்த முதல் படங்கள் தொடர்பான சமாச்சாரங்களே நினைவில் இருக்கின்றன. ரெண்டு லட்ச ரூபாய் பெறுமான ஒரு கச்சாத்தைப் போன வாரம் எங்கோ வைத்தேன். தேடுகிறேன். தவிர, சிசு வயது ஞாபகங்களுக்குக் குந்தகம் இல்லை.
முதல் படங்கள் என்றேன் இல்லையா, அதில் பன்மை உண்மை. சினிமா பார்க்க என்று கிளம்பி முதன் முதலாக நான் பார்த்தது இரண்டு படங்கள். ஒரே நாளில். முதலாம் ஆட்டம், இரண்டாம் ஆட்டம்.
அப்போது எனக்கு நான்கு வயது. எங்கள் அப்பாவின் ஊர் குன்னுவாரங்கோட்டை. அதாவது ஊரைச் சுற்றி மாலை போட்டது மாதிரி குன்றுகள் என்பதால் குன்று +ஆரம் + கோட்டை. ‘அது ஒரு அழகிய கிராமம்’ என்று அடிக்குரலில் சொல்லத் தக்க ஊரல்ல. ஊருக்கு இன்னொரு பெயர் உண்டு. யார் மீது ஆதங்கமோ, கன்னாபட்டி என்று அந்த மற்றொரு பெயரால்தான் அம்மா குறிப்பிடுவது.
பக்கத்து குக்நகரம் வத்தலக்குண்டு. அஞ்சு மைல். அங்கேதான் சினிமா தியேட்டர் எல்லாம் இருக்கும். குக்கிராமப் பெண்கள் ஒரு திட்டம் போட்டார்கள். சுயஉதவியாகக் கிளம்பி வத்தலக்குண்டுக்குப் போய்ப் படம் பார்ப்பது. பிள்ளைகளை விட்டுப் போக முடியாது. வண்டி கிடையாது. நடைப் பயணம்தான். அதை, ‘நடராஜா பஸ் சர்வீஸ்’ என்று வேறு பேசிக்கொண்டார்கள். ஆயுசுக்கு ஒரு முறை அபூர்வமாகப் போவது, ரெண்டு படமாய்ப் பார்த்துவிட்டு வருவோம் என்று பேசியிருப்பார்கள் போலும்.
அப்போது டூரிங் கொட்டகைககள்தான். நாளுக்கு ரெண்டே ஷோ. முதல் ஆட்டத்துக்கு இருட்ட வேண்டும். படம் போட ஆறரைக்கு மேல் ஆகும். இரண்டாம் ஆட்டம் முடிய நிசியாகிவிடும். அந்தப் பெண் மக்கள் எப்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள், கணவன்மார் எங்கே போனார்கள் என்பதெல்லாம் இப்போது எனக்கு மர்மமாக இருந்தாலும் அன்று கிளம்பிவிட்டோம். எனக்குக் கால் வலிக்கும்போது தூக்கிக்கொள்வதாக அம்மா உறுதியளித்திருப்பார். நானோ பெரும் நடைச் சுற்றுலா உற்சாகத்தில் கிளம்பிவிட்டேன்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.