ரமேஷ் வைத்யா
சுற்றிலும் விழா மனோநிலை. சென்னைச் சாலைகள் வெறிச்சோடிவிட்டன. ஆனாலும் தெருக்களில் பரபரப்புத் தெரிகிறது. கந்தக நெடி தொடங்கியிருக்கிறது. கடைசி நேரத்தில் கடைக்கு அலைகிறவர்களை நினைத்துப் பரிதாபப்படலாமா என மனம் யோசிக்கிறது. சுயமாக – தன்னை நினைத்தே – அதைச் செய்துகொள்ளலாமே என அறிவு அறிவுறுத்துகிறது. தீபாவளியைப் பற்றி யோசனை கிளம்புகிறது.
தீபாவளி + படம் என்பதை தீபாவளிப் படம் என்றும், பட தீபாவளி எனவும் இரு விதங்களில் இணைக்க முடிகிறது.
நாளுங்கிழமையும் நலிந்தேனுக்கில்லை. எனினும், தமிழ்நாட்டில் ஒருவர் தீபாவளி என்பதிலிருந்து முற்றிலுமாகத் தள்ளியிருந்துவிட முடியாது. புராணத்தை விட்டாலும், விடுமுறை, போனஸ், புதுத் துணி வாசனை, குடும்பப் பிடுங்கல் எனப் பல வழிகளில் தீபாவளி தன் பல கரங்களையும் பலகாரங்களையும் நீட்டும்.
சந்தோஷ ஆகாயத்தையும் துக்க ஜன்னலின் வழியாகப் பார்க்கிற மனப் பிறழ்வுக்கு உளவியல் புத்தகத்தில் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அது எனக்குச் சின்ன வயதிலிருந்தே உண்டு. சோக காவியத்தின் நாயகனாக இருப்பதொரு வருத்த மகிழ்ச்சி.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.











