
திரைப்படங்களின் வெற்றி தோல்விகளை நிதர்சனமாக தீர்மானிப்பது எது? இது ஒரு Hypothetical கேள்வி. அனுமானங்கள் என்பவை ஏற்கனவே பெற்ற அனுபவங்களையொட்டி உருவாகுபவை. காலம்காலமாக நடப்பதும் அதுவே.
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா, ஏறக்குறைய தமிழ்ச்சமூகத்தின் அன்றாடத்தோடு பிணைந்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது சமூக நடப்புகளிலிருந்து சினிமாவிற்கும் சினிமாவிலிருந்து தனிநபர் நடத்தைக்கும் என அதிலொரு மும்முனை உள்ளது. பண்பாடு மற்றும் கலாச்சார பின்னணிகளோடு ஒன்றியுள்ள வெவ்வேறு வாழ்க்கையின் சாரங்கள், மாற்று சிந்தனைகள், முற்போக்குகள், தொழில்மயமாகிவிட்ட நவீனத்தால் உருவாகியிருக்கின்ற தலைமுறை வித்தியாசங்கள், உலகமயமாகியுள்ள இன்றைய பெருநகர பழக்க வழக்கங்களின் நீக்கு போக்குகள் என ஒன்றுக்கொன்று முரண்பட்டும் போயிருக்கின்ற தற்போதைய சூழலில் தமிழ் சினிமா ரசனையை முற்றிலும் மாற்று கோணத்தில் அலசியாக வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
2024-இல் வெளியான படங்களை முன்னிறுத்தி நான் இந்தக் கட்டுரை எழுதியிருக்கிறேன். வாழை, கொட்டுக்காளி, ஜமா, மெய்யழகன், லப்பர் பந்து, நந்தன், போகுமிடம் வெகுதூரமில்லை, பேச்சி, நீல நிறச் சூரியன், ஜில்லு, போன்ற படங்களும் GOAT, வேட்டையன், டிமான்டி காலனி-2, ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன், பி.டி.சார், கடைசி உலகப் போர் போன்ற படங்களும் மக்களிடம் போய் சேரும்போது கிடைக்கின்ற ரிசல்ட் இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. ஒன்று, பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் எனப்படுகிற வசூல் சம்பந்தப்பட்டது. இது பெரும்பாலும் ஹீரோக்களுக்கு இருக்கிற சந்தை மதிப்பை பொறுத்தது. இன்னொன்று, கதை அம்சத்திலும் அது சொல்லப்பட்ட விதத்திலும் அனைத்து பார்வையாளர்களையும் சென்றடைவது.
இரண்டு வகை திரைப்படங்களுக்கும் இருப்பவர்கள் ஒரே பார்வையாளர்கள் தாம். அவர்களால் இரண்டுவிதமாகவும் எப்படி ரியாக்ட் பண்ண முடிகிறது? அது ஒரு விந்தை. அவர்களின் ரசனை மட்டத்தை எந்தக் கோணத்திலிருந்து குறி வைத்து படம் எடுப்பது? இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருக்கிற கெட்டிக்காரத்தனத்தை பல்ஸ் பிடித்து அறிவது கடினம்.
இயக்குநருக்கும் சரி, படத்தைத் தயாரிக்க முன்வருகிற தயாரிப்பாளருக்கும் சரி.. அவர்களின் முன்னே இருக்கிற ஒரே கேள்வி இதுதான். Who is your audience? ஒரு கதைக்கான புள்ளியை அங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும். பார்வையாளர்களுக்கு படம் பிடித்துப் போகும் என்பது ஒரு நம்பிக்கை. அது ஒரு எப்போதுமே ஒரு பரிசோதனை முயற்சி. இதில், கணிப்புகளின் விளைவுகளுக்கு 50-50 வாய்ப்புண்டு.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.