
“பாங் ஜூன் ஹோ நேர்காணல்”
பாங் ஜூன் ஹோ தென் கொரியத் திரைப்படமான The Parasite படத்தின் இயக்குநர். உலகத்தில் உள்ள அத்தனை திரைப்பட விரும்பிகளுக்கும் அறிமுகமானவர் இவர். வன்முறைக் காட்சிகளைக்கூட அதற்கான உளவியல் காரணத்தோடு இவரால் சொல்ல முடியும். நம்மை ஏற்றுக்கொள்ள வைக்கவும் முடியும். இவரது படமான Memoirs of Murder தென் கொரியாவில் 1980ம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சியின் கீழ் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இயக்குநர் ஹிட்ச்காக்கின் ரசிகர் இவர். ஒரு பேட்டியில் பாங் ஜூன் ஹோ இவ்வாறு சொல்கிறார்…“ ஹிட்ச்காக் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. மழையில், இரவில் ஏதோ ஒரு தனித்த இடத்தில் நடக்கும் கொலையை விட பட்டப்பகலில் நடந்துவிடும் கொலை த்ரில்லாக அமையும் என்று அவர் சொன்னது என் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. அடிக்கடி அது குறித்து நான் யோசிப்பேன். என்னுடைய படத்திலும் அதனுடைய பாதிப்பைப் பார்க்கலாம். இப்போது யோசித்துப் பாருங்கள், Memoirs of Murder படத்தின் முதல் காட்சியும், Parasite படத்தின் இறுதிக் காட்சியும் அதன் பாதிப்பு கொண்டவை எனத் தெரியும்” என்றார்.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.