
கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு..’ என்ற சிறுகதை உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன் சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலையும் கணவன், ஊரிலிருக்கும் தன் மனைவிக்கு எழுதும் கடிதமாக விரியும் அந்தக் கதை. தெருத் தெருவாக வீடு தேடிய அவன் இறுதியில் ஓரிடத்தில் இரண்டு பூட்ஸ்கள் கிடப்பதைப் பார்ப்பான், பூட்ஸ்களில் இருந்து புகையாக வர அருகே சென்று பார்த்தால் பூட்ஸ்க்குள் சின்னஞ்சிறு லில்லிப்புட் உருவ மனிதன் ஒருவன் அமர்ந்திருப்பான். தானும் தன் குடும்பமும் சென்னை முழுக்க வீடு தேடி கிடைக்காமல் கடைசியாக கிடைத்த இந்த பூட்ஸ்க்குள் குடியிருக்கிறோம் என்றும், மனைவி அடுப்பு மூட்டிய புகைதான் தற்போது அவர் பார்த்தது என்றும் விவரிப்பான். வாசிக்க நகைச்சுவையாக தெரிந்தாலும் நாற்பது வருடங்கள் கழித்தும் வீடு தேடும் நிலைமை இதுதான். ஒண்டிக்க எதாவது சிறிய இடமாவது கிடைக்காதா என பொருளாதாரம் சீரடையாத மத்திய தர வர்க்கம் வீடு தேடி தினம் தினம் மாநகரில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. குடியிருக்க ஒரு வீடு என்பது ஒரு கதையோடு முடிவடையக் கூடியதா?
வானமென்னும் ஒரு கீழிருக்கும் உலகெங்கிலும் ஒண்டிக்கொள்ள ஒரு கூரையைத் தேடி மனிதர்கள் அலைவது எத்தனை காலமாக தொடரும் கதை!
“மனுசாளுக்கு குந்த ஒரு கூரை வேணும்ப்பா” என்ற வார்த்தையை என் தாத்தா அடிக்கடிக் கூறுவார்.
நியோ ரியலிச திரைப்படங்களின் பிதாமகரான விட்டோரியா டிசிகாவின் வின் மகத்தான படைப்புகளில் ஒன்று The Roof. 1956-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் காண்பவருக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தக் கூடியது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.