
Thug Life படத்தின் டீசரில் கமல்ஹாசன் இப்படிச் சொல்வார் “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன். காயல்பட்டணத்துக்காரன். பொறக்கும்போதே என் தலைல எழுத்தி வச்சிட்டாவ..கிரிமினல், தக், யாகுஸா..யாகுஸான்னா ஜப்பான் மொழில கேங்க்ஸ்டர்னு சொன்னாவ..சாவு என்னைத் தேடி வந்தது இது முதல் முறை இல்ல..கடைசி முறையும் இல்ல” இந்த வரிகள் தான் படத்தின் மொத்தக் கதையும்.
புதுடில்லியில் ரெங்கராய சக்திவேலின் கேங்ஸ்டர் குழுவுக்குள் நடக்கும் அண்ணன் தம்பி சண்டைகள்..துரோகங்கள். அதிகாரத்தின் மீதான பேராசைகள் கொண்ட கதை. உடன் இருப்பவர்களின் மரணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் ஒருவர் சாகாவரம் பெற்றது போல எல்லாவற்றையும் கடந்து கொண்டே இருக்கிறார் என்றும் கதையை புரிந்து கொள்ளலாம். ஒரு சந்தேகம் என்னவெல்லாம் செய்யக்கூடியது என்பதைக் காட்டக்கூடிய படமாகவும் எடுத்துக் கொள்ளலாம். தனக்கு எதிரான துரோகம் நடந்தபோதும், முதுகில் குத்தியவனுக்காகக் கூட, அவனது தங்கையை அவனுடன் சேர வைக்கிற ஒருவனுடைய கதை என்றும் புரிந்து கொள்ளலாம். அதிகாரம், துரோகம், பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் துறந்து மனைவிக்காக தன்னை ஒப்புக்கொடுத்து வந்து நிற்கும் ஒரு கணவனின் கதையாகவும் சொல்லியிருக்கலாம்.
இத்தனை சாத்தியங்களைக் கொண்ட படம் இது. மணிரத்னத்தின் முந்தைய படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நிகழ்ந்த அதே குழப்பம் இதிலும் நிகழ்ந்துள்ளது. நாவலின் மொத்த கதையையும் ஒரு கோட்டுக்குள் கொண்டு வராமல் அங்கங்கு இழுத்த இழுப்புக்கெல்லாம் போன அதே குளறுபடி Thug Lifeலும் நடந்திருக்கிறது.
Support authors and subscribe to content
This is premium stuff. Subscribe to read the entire article.